இந்த ஆண்டு 10 மாதங்களில் வெ.21 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

லாஹாட் டத்து, நவ. 24-

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில், 21 கோடி வெள்ளி மதிப்பிலான பொருட்களைப் பறிமுதல் செய்ததன் வழியாக, கடல்சார் போலீஸ் படையினர் 7 ஆயிரத்து 103 சம்பவங்களை முறியடித்துள்ளனர். போதைப்பொருள், சிகரெட், மதுபானம், பெட்ரோல், டீசல், நிலம் மற்றும் கடல் உயிரினங்கள் போன்றவற்றை அப்படையினர் கைப்பற்றி இருப்பதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறினார்.

"அரச மலேசிய போலீஸ்படை தலைமைத்துவத்தின் சார்பாக, கடல்சார் போலீஸ் படைக்குள் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தற்காத்து வருகிறோம். இது, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் கீழ் வைக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். சபா மாநிலத்தில் கடத்தல் சம்பவங்களைக் குறைப்பதில் போலீசார் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறிய அவர், 2020ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில், சபாவில் கடத்தல் மற்றும் பிணைப்பணம் கோரும் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.

சபா, லாஹாட் டத்துவில் உள்ள பிபிஎம் தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த 77ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது ரஸாருடின் இதனைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *