மலேசியாவில் கூகுள் நிறுவன முதலீடு நாட்டின் AI பொருளாதாரத்தை தொடர்ந்து இயக்கும்- தெங்கு ஸஃப்ருல் அஜீஸ்!

top-news
FREE WEBSITE AD

மலேசியாவில் கூகுள் நிறுவனத்தின் முதலீடு, நாட்டின் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பொருளாதாரத்தை தொடர்ந்து இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தனது முதல் தரவு மையம் மற்றும் கூகுள் கிளவுட் பிராந்தியத்தை அமைப்பதற்காக கூகுளின் RM9.4 பில்லியன் முதலீடு, 2030 ஆம் ஆண்டுக்குள் நீண்டகால பொருளாதார தாக்கத்தில் RM15 பில்லியன் வரை உருவாக்க முடியும் என்றும் மேலும் 26,500 வேலைகளை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவில் AI வளர்ச்சியை  எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லலாம், சைபர் பாதுகாப்பை எப்படி வலுப்படுத்தலாம் மற்றும் டிஜிட்டல் திறன்களில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து விவாதிக்க கூகிள் பிரதிநிதிகளைச் சந்தித்ததாக அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாகப் பயணம் மேற்கொண்டுள்ள தெங்கு ஸஃப்ருல், கூறினார்.

உயர்தர முதலீடுகளுக்கு முழு ஆதரவு வழங்குவதற்கும்,உகந்த முதலீட்டு சூழலை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" என்று அவர் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

கடந்த வாரம்,  மலேசியாவில் கிளவுட் மற்றும் AI உள்கட்டமைப்பில் RM10.5 பில்லியன் முதலீட்டிற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் மைக்ரோசாப்ட் உறுதிப்படுத்தியது, இதில் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஹைப்பர்ஸ்கேல் தரவு மையங்களை உருவாக்குவதும் அடங்கும். ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவால் மலேசியப் பொருட்களுக்கு 24% வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு வாரம் கழித்து 90 நாள் இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Google melabur RM9.4 bilion untuk membina pusat data dan wilayah Google Cloud pertama di Malaysia, dijangka jana RM15 bilion kesan ekonomi serta 26,500 pekerjaan menjelang 2030. Kerajaan komited menyokong pembangunan AI, keselamatan siber dan kemahiran digital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *