நஜிப் ஆதரவு பேரணியில் யாரும் கலந்துகொள்ள வேண்டாம்! - ஜாஹிட் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

புத்ரா ஜெயா, ஜன 6: புத்ரா ஜெயா நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெறவிருக்கும் நஜிப் ஆதரவு பேரணியில் அம்னோ உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று, அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்படி பேரணியில்‌ கட்சி உறுப்பினர்களில்‌ யாராவது கலந்து கொள்வார்களேயானால்‌ அது அவர்களின்‌ தனிப்பட்ட முடிவாகவே இருக்கும்‌ என்றும்‌ அத்தகைய பேரணியை நடத்த போலீசார்‌ அனுமதி அளிக்கவில்லை என்றும்‌ துணைப்‌ பிரதமருமான ஸாஹிட்‌ குறிப்பிட்டார்‌. 

கட்சியின்‌ வழிகாட்டுதல்களை உறுப்பினர்கள்‌ அவசியம்‌ பின்பற்ற வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொண்ட அவர்‌, கட்சியை பிரதிநிதித்து அதிகாரப்பூர்வமாக அதில்‌ கலந்து கொள்வதை தவிர்க்குமாறும்‌ வலியுறுத்தினார்‌. 

கட்சியின்‌ தலைமைச்‌ செயலாளரினால்‌ வெளியிடப்பட்டிருக்கும்‌ செய்தி, பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தி தேசிய போலீஸ்‌ படைத்‌ தலைவரிடமிருந்து டான்‌ ஸ்ரீ ரஸாருடின்‌ உசேன்‌ வந்திருக்கும்‌ உத்தரவுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. 

அப்பேரணியில்‌ அம்னோ கிளைகள்‌ அல்லது தொகுதிகளைச்‌ சேர்ந்தவர்கள்‌ அதிகாரப்பூர்வமாக கலந்து கொள்ள மாட்டார்கள்‌ என்று நாங்கள்‌ நம்புகிறோம்‌.                                                                           

அப்படியே யாராவது கலந்து கொண்டால்‌ அது அவர்களின்‌ சொந்த விருப்பத்தின்‌ அடிப்படையிலானதாகவே இருக்கும்‌ என்று சிலாங்கூர்‌, பாங்கியில்‌ உள்ள மலேசிய தேசிய பல்கலைக்‌ கழகத்தில்‌ நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டபோது ஜாஹிட்‌ தெரிவித்தார்‌. 

இந்நிலையில்‌, அப்பேரணியில்‌ தாம்‌ தனிப்பட்ட முறையில்‌ கலந்து கொள்ளப்‌ போவதாக, அம்னோ இளைஞர்‌ பிரிவுத்‌ தலைவர்‌ அக்மால்‌ சாலே கூறியுள்ளார்‌.  பேரணியில்‌ கலந்து கொள்ளும்‌ அம்னோ உறுப்பினர்களுக்கு எதீராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டபோது, அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால்‌ சம்பந்தப்பட்ட உறுப்பினர்‌ அல்லது உறுப்பினர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்‌ என்று ஜாஹிட்‌ தெரிவித்தார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *