JPJ சோதனையில் ஐவர் கைது! 72 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! 789 சம்மன்கள்!

- Sangeetha K Loganathan
- 02 Feb, 2025
பிப்ரவரி 2,
தலைநகரில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு போக்குவரத்து குற்றப்புலனாய்வு துறையினர் மேற்கொண்ட சோதனையில் 72 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டது, போக்குவரத்து விதிகளை மீறியது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு 789 சம்மன்கள் வழங்கப்பட்டதுடன், 15 முதல் 25 வயதுடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் போக்குவரத்து குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் Mohd Zamzuri Mohd Isa தெரிவித்தார்.
தலைநகரின் Jalan Loke Yew, Jalan Kuching, Jalan Tun Razak முக்கிய சாலைகளில் பொதுப்போக்குவரத்துக்கு அபாயத்தை விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் கும்பல் செயல்படுவதைத் தடுக்க கோலாலம்பூர் போக்குவரத்து குற்றப்புலனாய்வு துறை சிறப்புப் படை அமைத்துள்ளதாகவும் பொதுவிடுமுறைகளில் அதிகமானப் பள்ளி மாணவர்கள் 18 வயதுக்குக் குறைவானவர்கள் நள்ளிரவுகளில் வீட்டை விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியேறினால் பெற்றோர்கள் கண்டிக்கும்படியும் Mohd Zamzuri வலியுறுத்தினார்.
Sebanyak 72 motosikal disita kerana diubah suai tidak mengikut spesifikasi dalam Operasi Motosikal dan Samseng Jalanan. Operasi ini turut melibatkan pemeriksaan 1,500 kenderaan. Sebanyak 789 saman telah dikeluarkan dan lima individu telah ditahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *