போதையில் வாகனம் ஓட்டிய 5 பேர் கைது! 48 வாகனங்கள் பறிமுதல்!

top-news

ஜனவரி 7,


ஜொகூர் மாநிலக் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 48 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 467 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார். 

கடந்த ஜனவரி 3 முதல் ஜனவரி 5 அதிகாலை வரையில் ஜொகூரின் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் குடி போதையில் வாகனத்தைச் செலுத்திய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் சாலை போக்குவரத்து விபத்துகளைக் கட்டுப்படுத்த போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையும் போக்குவரத்து ஆணையமும் ஜொகூரில் பல்வேறு சாலைகளில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.

Polis Johor menahan lima pemandu mabuk dan merampas 48 kenderaan dalam operasi dari 3 hingga 5 Januari. Sebanyak 467 saman dikeluarkan untuk mengawal peningkatan kemalangan jalan raya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *