7 வணிகத் தளங்கள் மூடப்பட்டது! 9 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

நவம்பர் 16,

தலைநகரின் Danau Kota, Wangsa Maju பகுதியில் வெளிநாட்டினர்கள் வணிகத்தில் ஈடுபடுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வணிகத் தளங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம். சுற்றுச் சூழல் சுகாதாரத் துறை, Wangsa Maju மேம்பாட்டு வாரியம் தேசியக் குடிநுழைவுத் துறை ஆகிய அரசு இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். சாலையோரங்களில் கூடாரங்கள் அமைத்தும் சுயமாகக் கடைகளை அமைத்தும் இருந்த 25 சந்தைக் கடைகளை அப்புறப்படுத்தியது மட்டுமின்றி Wangsa Maju மேம்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமான 7 வணிக வளாகங்களை மூடியதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. 

உள்ளூர் நபர்களின் ஆவணங்களைக் கொண்டு Wangsa Maju மேம்பாட்டு வாரியத்திடமிருந்து வணிக வளாகங்களைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த 9 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் எந்தவோர் ஆவணங்களும் அடையாளங்களும் இல்லை என குடிநுழைவுத் துறை  தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட 9 வெளிநாட்டினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DBKL menutup 7 premis di Danau Kota, Wangsa Maju, dan menahan 9 warga asing tanpa dokumen sah yang menggunakan premis atas nama tempatan. Tindakan diambil atas kesalahan imigresen dan perniagaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *