சரவாக்கில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ஜே.கே.ஆருக்கு உத்தரவு!

- Muthu Kumar
- 31 Jan, 2025
கூச்சிங், ஜன. 31-
சரவாக்கின் பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க அம்மாநில பொதுப் பணித்துறை, ஜே.கே.ஆருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பான் போர்னியோவில் சேதமடைந்த சாலைகளின் அளவு. இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றாலும், முக்கியமான பகுதிகளில் பழுதுபார்க்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று சரவாக் துணை முதலமைச்சர் டத்தோ அமார் டக்லஸ் உகா எம்பாஸ் தெரிவித்தார்.
"மம்போங் சாலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி மிகவும் மோசமாக உள்ளது. எனவே ஜே.கே.ஆர் முழு விழிப்பு நிலையில் உள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சேதமடைந்த சாலைகளைக் கண்காணிக்க வேண்டும்," என்றார் அவர்.நேற்று, சராவக் கூச்சிங், பத்து காவா சுங் ஹுவா சீன பள்ளியில் செயல்படும் தற்காகலிக நிவாரண மையத்திற்கு வருகை மேற்கொண்ட பின்னர், டத்தோ அமார் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, ஒரு சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் சரவாக் அரசாங்கம், பேரிடர் நிர்வகிப்பு செயற்குழு மூலம், மோசமான வெள்ளத்தால் பாதிப்படைந்த பிந்துலுவில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"பாதிக்கப்பட்டவர்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் சீராக நடைபெறுகின்றன. நமக்கு ராணுவத் தரப்பில் இருந்து உதவி கிடைக்கிறது. மிரி, சிபு, முக்காவில் இருந்து தீயணைப்பு படையினரும் உதவுகிறார்கள். சரவாக்கில் சராசரி மழைப்பொழிவு ஆண்டுக்கு 5000மிமீ. ஆனால் பிந்துலுவில் 400மிமீ பொழிகிறது. மழை அதிகரிப்பை நாம் காண முடிகிறது என்றார் அவர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்ய அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள், தங்களின் நிர்வாகக்குழுவைத் தொடர்பு கொள்ளுமாறு உங்கா அழைப்பு விடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *