கனரக வாகன பரிசோதனை தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம்!

- Muthu Kumar
- 09 Jan, 2025
கோலாலம்பூர், ஜன.8-
கனரக வாகன பரிசோதனையை அங்கீகரிக்கும் கும்பலில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு வாகன பரிசோதனையாளர்கள் உட்பட எண்மரை, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்திருக்கின்றது.அந்த ஆறு பரிசோதனையாளர்களும் கோலாலம்பூரில் உள்ள ஒரு வாகன பரிசோதனை மைபத்தைச் சேர்ந்தவர்கள் என்று, வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலங்களை அளிப்பதற்காக வந்தபோது. 30 முதல் 50 வயதுடைய அந்த எண்மரும், கடந்த திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணிக்கிடையில் கைது செய்யப்பட்டதாகவும் அவ்வட்டாரம் தெரிவித்தது. “இதற்கு முன்னர் சாலைப் போக்குவரத்து இலாகாவினால் (ஜேபிஜே) ஒப்படைக்கப்பட்ட ஒரு முகவரிடம் எம்ஏசிசி நடத்திய விசாரணையின் பலனாக அந்த எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“அந்த எண்மரில், வாகன பரிசோதனையாளர்கள் அறுவரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் எம்ஏசிசியின் ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்” என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.எஞ்சிய இருவர், வரும் சனிக்கிழமை உரையில் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
'நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலையில், புத்ராஜெயாவில் உள்ள மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் எம்ஏசிசி விண்ணப்பம் செய்த பிறகு,அவர்கள் இருவரையும் தடுத்து வைக்கும் உத்தரவை, மாஜிஸ்டிரேட் இர்ஸா கலைக்கா வெளியிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும், எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் அஹ்மாட் குசாய்ரி யஹ்யா தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *