குவாங்கின் கம்போங் பூங்கா ராயாவில் குழந்தையை கடத்தும் வெளிநாட்டு பிரஜை பிடிபட்டான்!

top-news
FREE WEBSITE AD

சுங்கை பூலோ:

குவாங்கின் கம்போங் பூங்கா ராயாவில், வெளிநாட்டு பிரஜை ஒருவன் குழந்தையை கடத்த முயன்ற போது பொதுமக்களால் சுற்றி வளைக்கப்பட்டான்.இது தொடர்பாக 47 வயதான உள்ளூர் பெண் ஒருவர்  புகார் அளித்ததாக, சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர்  முகமட் ஹபீஸ் முஹம்மது நோர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நண்பகல் 12.40 மணியளவில் தனது அண்டை வீட்டில் அழுகை சத்தம் கேட்டதாகவும்,  அங்கு சென்று  பார்த்த போது,  சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்றதைக் கண்டதாகவும் புகாரளித்தவர் கூறுனார்.பின்னர் அந்நபர் உள்ளூர் மக்களால் பிடிபட்டார் என்று தனது புகாரில்  அம்மாது தெரிவித்தார்.

இரண்டு வயது ஆண் குழந்தையொன்றை வீட்டின் வரவேற்பறையில் வைத்து கடத்த முயற்சித்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் குழந்தையை கடத்த முயற்சிக்கும் முன் துப்புரவு பணியாளர் என்று கூறியதாகவும்,  சம்பவ இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பிடிபட்டதாகவும் அவர் கூறினார். மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், குற்றவியல் சட்டத்தின் 363 ஆவது பிரிவின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  முகமட் ஹபீஸ் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *