KLIA போலீஸ் தலைமையகத்தில் வெளிநாட்டு பிரஜை மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 26-

KLIA போலீஸ் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த முப்பது வயது வெளிநாட்டு நபர் ஒருவர் சனிக்கிழமையன்று உயிரிழந்தார் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் உசேன் ஒமார் கான் நேற்று தெரிவித்தார்.

பிரிட்டனிலிருந்து தாய்லாந்தின் புக்கெட்டுக்குச் செல்லும் வழியில் கேஎல்ஐஏ விமான நிலையத்தில் அந்நபர் “டிரான்சிட்” பயணியாக இருந்ததும்,அவ்வேளையில், அந்நபர் இதர பயணிகளுக்குத் தொல்லை கொடுத்ததோடு மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான். அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 1.30மணிக்கு அந்த ஆடவன் கைது செய்யப்பட்டான் என்று உசேன் கூறினார்.

KLIA போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில், அந்த வெளிநாட்டுப் பயணி அங்கேயும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டான்.அங்குள்ள பல பொருட்களைச் சேதப்படுத்தியதோடு இரண்டு போலீஸ்காரர்களையும் ஓர் உதவிப் போலீஸ்காரரையும் காயப்படுத்தினான். அதன் பிறகு, விஷமத்தனம் புரிந்தது, போலீஸ்காரர்களுக்கு காயமேற்படுத்தியது மட்டுமின்றி அவர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகியவை தொடர்பில் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது என்று உசேன் கூறினார்.

அப்பயணியின் ஆவணங்களைப் போலீசார் பரிசோதனை செய்து கொண்டிருந்த வேளையில், அவன் மயங்கி விழுந்துள்ளான். உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அவன் இறந்து விட்டதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் உடற்கூறு சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும், உடற்கூறு பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிக்க முடியவில்லை. இச்சம்பவத்தை ஒரு திடீர் மரணம் என்று தாங்கள் வகைப்படுத்தியிருப்பதாகவும் உசேன் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *