ஏஎம்எம் கலந்து கொள்ள ஆசியானின் வெளியுறவு அமைச்சர்கள் லங்காவிக்கு வருகை!

top-news
FREE WEBSITE AD

லங்காவி.. 18-

இன்று சனிக்கிழமை தொடங்கவிருக்கும் ஏஎம்எம் எனப்படும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் லங்காவிக்கு வருகை புரிய தொடங்கி விட்டனர்.வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், அங்கு சென்றடைந்தார்.

பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் என்ரிக் ஏ. மனலோ. நேற்று லங்காவி சென்றடைந்தார்.

ஏஎம்எம் சந்திப்பு லங்காவியின் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. ஆசியானுக்கு மலேசியா தலைமை ஏற்றிருக்கும் நிலையில், நடைபெறும் முதல் பெரிய சந்திப்பு கூட்டமாக இது விளங்குகிறது.
இரண்டு நாள் நடைபெறும் இக்கூட்டத்திற்கு ஆசியானின் பத்து நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

திமோர் லெஸ்தேயின் வெளியுறவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் பெண்டிதோ டோஸ் சந்தோஸ் ஃப்ரீடாஸ் ஒரு பார்வையாளராக இக்கூட்டத்தில் கலந்து கொள்வார். ஆசியானின் வெளியுறவுகள் உட்பட வட்டாரம் மற்றும் மேம்பாடு குறித்து அமைச்சர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இன்று சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டத்தை முன்னிட்டு, அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இரவு விருந்துணவில் பெரொனொக் எனப்படும் கடல் உணவு பரிமாறப்படும்.

அந்த இரவு விருந்திற்காக, 10 கிலோகிராம் பெரொனொக் வகை கடல்வாழ் உயிரினத்தை தமது தரப்பு பெற்றுள்ளதாக பார்க் ரோயல் லங்காவி ரிசோர்ட் தங்கும் விடுதியின் உதவி தலைமை சமையல்காரர், எல்லெரி எடி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *