தீ விபத்தில் சிக்கிய வெளிநாட்டுத் தொழிலாளி மரணம்!

- Shan Siva
- 23 Jan, 2025
கிள்ளான், ஜன 23: எரிவாயு சேமிப்பு
நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய வெளிநாட்டு தொழிலாளி நேற்று மாலை 6.32 மணிக்கு உயிரிழந்தார்.
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா (HTAR) மருத்துவமனையில் அந்நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,
பாதிக்கப்பட்டவருக்கு மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் கிள்ளான் உத்தாரா
காவல்துறைத் தலைவர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த
இடத்தில் ஆறு பேர் இருந்தனர். இதில், இறந்தவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர், மற்ற மூவர் காயமின்றி தப்பினர் என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில்
தெரிவித்தார்.
தொழிற்சாலை
வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு
(எல்பிஜி) சிலிண்டர்களால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள்
தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தினால்
RM5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக
மதிப்பிடப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *