விலங்குகளின் பாகங்களை வைத்திருந்த வனத்துறை அதிகாரி கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே. 16: சபா, துவாரான் பகுதியில், பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பல்வேறு பாகங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் வனத்துறை அதிகாரி என நம்பப்படும் ஒருவர் நேற்று காலை கைது செய்யப்பட்டார். இவற்றின் மதிப்பு சுமார் RM590,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.


61 வயதான அந்த நபர் காலை சுமார் 7.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வனவிலங்குப் பிரிவுத் தளபதி ஜாக்கி அஷார் தெரிவித்தார்.


அதில், மான்கொம்புகள் என நம்பப்படும் 55 ஜோடி கொம்புகள், மூன்று காண்டாமிருகக் கொம்புகள், 330 எறும்புத்தின்னி செதில்கள், அத்துடன் மலைப்பாம்புகளின் சடலங்கள் மற்றும் தோல்கள், இருவாட்சிப் பறவையின் மண்டையோடுகள், யானையின் எலும்புகள் மற்றும் பற்கள்,  கரடியின் மண்டையோடுகள் மற்றும் பல காட்டு விலங்குகளின் பாகங்கள் இருந்தன.


சபாவின் உட்பகுதியில் உள்ள கிராமவாசிகளிடமிருந்து அந்த நபர் விலங்குகளின் பாகங்களை வாங்கியதன் மூலம் பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஜாக்கி கூறினார்.


1986-ல் வனத்துறை அதிகாரியாகப் பணியாற்றியதிலிருந்தும், 2019-ல் உடல்நலக் காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெற்றதிலிருந்தும் அந்த நபர் காட்டு விலங்குகளின் பாகங்களைச் சேகரிக்கத் தொடங்கியதாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *