என்னை மன்னித்துவிடுங்கள்! – வெளியுறவு அமைச்சர்

- Shan Siva
- 18 Dec, 2024
புத்ராஜெயா, டிச 18: தடைசெய்யப்பட்ட பகுதியில் புகைபிடித்ததற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மன்னிப்பு கேட்டார். அவர் புகைபிடித்த சம்பவத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இது தொடர்பாக இன்று காலை சிரம்பான்
மாவட்ட சுகாதார அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வந்ததாக டோக் மாட் என்று பிரபலமாக
அறியப்படும் முகமட் ஹசான் கூறினார்.
இது பொதுமக்களிடையே ஒரு
கவலையாகவும் பிரச்சினையாகவும் மாறியிருந்தால், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று அவர் விஸ்மா புத்ராவில் நடந்த
செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும் தாம் அபராதம்
செலுத்துவேன் என்றும், அது அதிகமாக
இருக்காது என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *