சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரி தீயில் கருகியது!

- Sangeetha K Loganathan
- 14 Jan, 2025
ஜனவரி 14,
புத்ராஜெயாவிலிருந்து சைபெர்ஜெயா செல்லும் சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரியில் திடீரென தீ ஏற்பட்டதில் லாரி ஓட்டுநர் லாரியிலிருந்து குதித்து தப்பினார். மாலை 6.30 மணியளவில் லாரி முழுமையாகத் தீயில் கருகியதாக Sepang, மாவட்டக் காவல் ஆணையர் Norhizam Bahaman தெரிவித்தார்.
லாரியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் தீ விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் லாரி ஓட்டுநரையும் லாரியின் உரிமையாளரையும் காவல் துறையினர் விசாரித்து வருவதாகவும் இந்த தீ விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் Norhizam Bahaman உறுதிப்படுத்தினார்.
Sebuah lori terbakar di KM 38 Lebuhraya Putrajaya-Cyberjaya akibat panas melampau pada enjin. Pemandu selamat selepas melompat keluar ketika api marak. Lori bergerak sendiri di atas jalan sebelum hangus terbakar sepenuhnya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *