கைதுக்குப் பயந்து கொரில்லா தந்திரத்தைப் பயன்படுத்திய வெளிநட்டினர்!

- Shan Siva
- 22 Feb, 2025
கிள்ளான், பிப் 22: கைதுக்கு பயந்து, இன்று அதிகாலை கிள்ளானில் உள்ள மேரு சந்தை வளாகத்தில் நடந்த
அமலாக்க நடவடிக்கையின் போது, குடியேற்றத்
துறையினரால் கைது செய்யப்படுவார்கள் என்று பயந்து, ஒரு சில வெளிநாட்டினர் "கொரில்லா தந்திரங்களை"
பயன்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிகாலை 5.30
மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில், சில வெளிநாட்டினர் குறுகிய கால்வாயில் ஒளிந்து கொள்ள ஊர்ந்து சென்றதையும்,
சிலர் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க கடைகளின்
கூரைகளில் ஏறியதையும் கண்டதாக குடிநுழைவுத்துறை துணை இயக்குநர் ஜாஃப்ரி எம்போக்
தாஹா கூறினார்.
இந்நடவடிக்கையில்
சோதனை மேற்கொள்ளப்பட்ட 628 வெளிநாட்டினரில் 17 முதல் 57 வயதுடைய 598 பேர் கைது
செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *