ஆசியான் ஆலோசனைக் குழுவில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 16:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2025ஆம் ஆண்டு மலேசியாவின் ஆசியான் தலைவர் பதவிக்கான முறைசாரா ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவை நியமித்துள்ளார்.

ஆசியான் தலைவருடன் பிராந்திய விவகாரங்களில் நிபுணத்துவம் மற்றும் யோசனைகளை பகிர்ந்து கொள்ள தக்சின் போன்ற அரசியல்வாதிகள் மலேசியாவிற்கு தேவை என்று அவர் கூறினார்.

முறைசாரா அமைப்பில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த ஒரு குழுவுடன், மலேசியாவுக்கு உதவுவதற்காகம் தக்சினை தனது தனிப்பட்ட ஆலோசகராக நியமிக்க ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *