ஊழல் உணர்வுக் குறியீடு! முன்னேறிய மலேசியா

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 10: டிரான்ஸ்பெரென்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வு குறியீட்டில் (Corruption Perceptions Index – CPI) மலேசியா தனது தரவரிசையை மேம்படுத்தியுள்ளது.

 முந்தைய ஆண்டு 57-வது இடத்தில் இருந்த மலேசியா, இம்முறை 54-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

 இந்த CPI பட்டியல், உலகம் முழுவதும் உள்ள 182 நாடுகளை, அரசுத்துறை ஊழல் குறித்த பொதுமக்களின் உணர்வை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்கிறது. இதில் 0 என்பது மிக அதிக ஊழல், 100 என்பது மிகச் சுத்தமான நிர்வாகம் என்பதைக் குறிக்கிறது.

 2025 CPI மதிப்பீட்டில் மலேசியா 52 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இது 2024 மற்றும் 2023 ஆண்டுகளில் பெற்ற 50 மதிப்பெண்களைவிட உயர்வு ஆகும்.

 கடந்த சில ஆண்டுகளாக நிலையாக இருந்த மதிப்பெண்களுக்குப் பிறகு, இம்முறை ஏற்பட்ட இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

மலேசியா:

2022: 47 மதிப்பெண்கள்

2021: 48 மதிப்பெண்கள்

2020: 51 மதிப்பெண்கள்
என்பவற்றை பதிவு செய்திருந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *