17 குற்றச்சாட்டுகளிலிருந்து ரோஸ்மா விடுவிக்கப்பட்டார்!

- Shan Siva
- 19 Dec, 2024
கோலாலம்பூர், டிச 19: 17 பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோரை விசாரணையின்றி உயர்நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.
அனைத்து குற்றச்சாட்டுகளையும்
ரத்து செய்யக்கோரி ரோஸ்மா தாக்கல் செய்த மனுவை ஏற்று உயர்நீதிமன்ற நீதிபதி
கே.முனியாண்டி இன்று இவ்வாறு தீர்ப்பளித்தார்.
RM70,97,750 பணமோசடி செய்ததாக ரோஸ்மா 12
குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதோடு, உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு தனது
வருமானத்தை அறிவிக்கத் தவறியதற்காக ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
72 வயதான ரோஸ்மா கடந்த 2013 டிசம்பர் 4 மற்றும் ஜூன் 8, 2017 க்கு இடையில் இக்குற்றங்களைச் செய்ததாகக் குற்றம்
சாட்டப்பட்டார். மேலும் அக்டோபர் 4, 2018
அன்றும் குற்றம் சாட்டப்பட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *