அன்வாரின் தலைமைக்கு அச்சுறுத்தல் இல்லை! - கைரி

- Shan Siva
- 10 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 10: முன்னாள் பிரதமர்
நஜிப் வீட்டுக்காவல் தொடர்பான கூடுதல் உத்தரவு தொடர்பாக, அம்னோ இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் கைரி ஜமாலுதீன்
அமைச்சர்கள் டாக்டர் ஜலிஹா முஸ்தபா மற்றும் அஸாலினா ஒஸ்மான் சையத் ஆகியோர் பேச
வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விஷயத்தில் இருவரும் "நேரடி பொறுப்பு" கொண்டவர்கள் என்று கைரி
கூறினார்.
சிறைச்சாலைத் துறைக்கு இந்த இணைப்பு கிடைக்கவில்லை என்று கூறியதற்காக (உள்துறை
அமைச்சர்) சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயிலை தாம் மதிப்பதாகவும், ஆனால் நேரடியாக அதற்குப் பொறுப்பான இரண்டு அமைச்சர்கள்
உள்ளனர் என்று அவர் தனது தனியார்
தொலைக்காட்சி நிகழ்வில் கூறினார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஜலிஹாவையும், மன்னிப்பு
வாரியத்தில் அவரது பங்கையும் சுட்டிக்காட்டிய கைரி, ஜலிஹா அதைப்
பற்றி அறிந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சரான அஸாலினாவுக்கு சட்டத்துறை
அலுவலகம் இந்த உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்
கூறினார். சட்ட அமைச்சருக்கு, சட்டத்துறை தலைவர் தெரிவிக்காமல் இருக்க வழி இல்லை என்று
அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜைத் இப்ராஹிம் இந்த விவகாரம் தொடர்பாக அஸாலினா, சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் மற்றும்
பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழைப்பு
குறித்தும் கைரி கருத்து தெரிவித்தார்.
இது சற்று மிகையானது என்றும், அரசியல் ரீதியாக,
இது அன்வாரின் தலைமைக்கு அச்சுறுத்தல் அல்ல
என்றும் அவர் கூறினார். இருப்பினும்,
இந்த சர்ச்சை அன்வாரை அரசியல் ரீதியாக
பலவீனப்படுத்தியுள்ளது என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *