எதிர் பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!

- Shan Siva
- 13 Feb, 2025
பினாங்கு, பிப் 13: பினாங்கின் ஜார்ஜ் டவுனில் நேற்று காலை 21 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் எதிர்
பாதையில் சென்று கார் மீது மோதியதில் பலியானார்.
ஜாலான் மஸ்ஜித்
நெகிரி சுரங்கப்பாதையில் ஒரு வளைவைத் திருப்பும்போது பாதிக்கப்பட்டவர் தனது
மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது என்று தீமோர் லாவுட்
காவல்துறைத் தலைவர் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.
மோட்டார்
சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். இன்று அதிகாலை 1.10 மணியளவில் அவர்
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் ஓர்
அறிக்கையில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *