17 ஆண்டுகளுக்குப் பின UEFA கோப்பையை கைப்பற்றிய டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்!

- Muthu Kumar
- 22 May, 2025
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.
அதன்படி முதல் அரையிறுதியில் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 7 கோல்கள் அடித்து மான்செஸ்டர் யுனைடட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.மற்றொரு அரையிறுதியில் போடோ/கிளிம்ட் அணிக்கு எதிராக 5 கோல்கள் அடித்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஜான்சன் அடித்த கோல் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது
இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு UEFA ஐரோப்பா லீக் கோப்பையை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *