வீட்டைச் சுற்றி வெள்ளநீர் சிவப்பாக மாறியதைக் கண்டு தம்பதி அதிர்ச்சி!

- Muthu Kumar
- 04 Dec, 2024
தும்பாட், டிச 4:
தும்பாட் தெலாகா பாத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கள் வீட்டைச் சுற்றி வெள்ளநீர் சிவப்பாக மாறியதைக் கண்டு ஒரு தம்பதி அதிர்ச்சியடைந்தனர்.35 வயதான அரசு ஊழியர் முகமட் ஆசம் ஜூசோ, சினார் ஹரியனிடம், இந்த சம்பவத்தை விவரித்துள்ளர்.தனது மனைவி சிவப்பு நிறத்தில் இருந்த வெள்ளநீரை காணொளியாக எடுத்து தன்னிடம் காட்டியபோது தாம் அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வியாழன் முதல் கனமழை காரணமாக தங்கள் வீட்டின் நுழைவுப் பாதை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, ஆனால் கோலோக் ஆற்றில் இருந்து தண்ணீர் தெளிவாக இருந்தது, அது திடீரென்று சிவப்பு நிறமாக மாறியது," என்று அவர் கூறினார்.
முதலில், சிவப்பு நிறம் எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்ததாகவும், பின்னர்தான், தங்கள் வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு மிளகாய் சாஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியான சாயம் என்று தாங்கள் உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *