இந்தோனேசிய மாதைக் கடத்தியதாக பணம் வசூலிக்கும்” நால்வர் மீது குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

ஜோர்ஜ்டவுன். டிச. 14-

ஓர் இந்தோனேசிய மாதைக் கடத்திச் சென்று தவறுதலாக அடைத்து வைத்திருந்ததாக, "பணம் வசூலிக்கும் நால்வர் மீது ஜோர்ஜ்டவுன் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. மாஜிஸ்டிரேட் சித்தி நூரூல் சுஹைலா பஹரின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆர். நரேந்திரன் (வயது 30) எம். அர்வீன் ராஜ் (வயது 28) ஆர். ஜெய்ரூபன் (வயது 25) மற்றும் ஷஃபிக் சேகர் அப்துல்லா (வயது 29) ஆகிய அந்த நால்வரும் மறுத்து விசாரணை கோரினர்.

இன்னும் பிடிபடாமல் இருக்கும் மற்றோர் ஆடவனுடன் சேர்ந்து, பினாங்கு தீவின் வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜாலான் கெலாவனியில் 41 வயதுடைய அந்த இந்தோனேசிய மாதுவைக் கடத்தியதாக அந்த நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட பின்னர் அம்மாதுவை அவர்கள்.இம்மாதம் 5ஆம் தேதி இரவு 8 மணியிலிருந்து 7ஆம் தேதி காலை 11.45 மணி வரையில் பிறை, ஜாலான் பாருவிலுள்ள பால்மா லகூனா வாட்டர் பார்க் சொகுசு அடுக்குமாடியின் வீடு ஒன்றில் அடைத்து வைத்திருந்ததாக,குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரைக்குமான சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும். குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 34உடன் சேர்த்து படிக்கப்பட்ட அதே சட்டத்தின் செக்ஷன் 365இன் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.அவர்கள் அனைவரையும் தலா ஒருவரின் உத்தரவாதத்துடன் தலா 8,000 வெள்ளி ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவரையோ சாட்சிகளையோ தொந்தரவு செய்யக் கூடாது என்று அவர்களுக்கு உத்தரவிட்டது. இவ்வழக்கு முடியும் வரையில் தங்களுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் மாதந்தோறும் தங்களை ஆஜர்படுத்திக் கொள்ளுமாறும் நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *