ஐஜிபி பற்றிய அவதூறான பதிவுகளை அகற்ற பப்பாகோமோவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன. 11-

இணையப் பதிவேட்டாளர் வான் அஸ்ரி வான் டெரிஸூக்கு எதிராக தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் தேசியப் போலீஸ்படைத் தலைவர் ரஸாருடின் உசேனுக்கு ஆதரவாக இடையீட்டுத் தடை உத்தரவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.

பப்பாகோமோ என்று பரவலாக அறியப்படுபவரான அஸ்ரி, சமூக ஊடகத்தில் ரஸாருடின் பற்றி வெளியிட்டுள்ள அவதூறான பதிவுகளை அகற்றுவதற்கு அந்த உத்தரவு வழிகோலுகிறது.அந்த அவதூறான பதிவுகளை அகற்றக்கோரி நீதித்துறை ஆணையர் கான் தெச்சியோங் இதற்கு முன்னர் பப்பாகோமோவுக்கு 21 நாள் காலக்கெடு வழங்கினார்.

ரஸாருடினுக்கு செலவுத்தொகையாக பத்தாயிரம் வெள்ளி வழங்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.நிதியமைச்சருமான அன்வார் போலீஸ்துறையும் வருமான வரித்துறையையும் ஏவிவிட்டு தம்மை விசாரணைக்கு உட்படுத்தியதாக அஸ்ரி குற்றஞ்சாட்டியிருந்தார். இது அவதூறான குற்றச்சாட்டு என்றுகூறி அவர் மீது ரஸாருடின் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *