சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட சொஸ்மா கைதிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 20: சுங்கை பூலோ சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் உடனடி சிகிச்சையை  மருத்துவமனையில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 பாதிக்கப்பட்ட கைதிகள் நீதிபதி நோர்லிசா ஒஸ்மான் முன் தங்கள் சாட்சியங்களை வழங்கியதாக 15 கைதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் டி ஹர்பால் சிங் தெரிவித்தார்.

அவர்கள் எப்படி தாக்கப்பட்டனர், எந்த உடல் பாகங்கள் காயமடைந்தன, குற்றவாளிகள் யார் என்பதை விவரிக்கும் வாய்மொழி சாட்சியங்களை வழங்கியதாக அவர் கூறினார்.

நீதிமன்றம் அனைத்து சாட்சியங்களையும் பதிவு செய்து, பின்னர் உடனடி மருத்துவ சிகிச்சைக்கு உத்தரவிட்டது,” என்று அவர் கூறினார்.

32 கைதிகளில் 25 பேர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதனை அடுத்து முறையான விசாரணைக்கு வழி வகுக்கும் வகையில் காவல் அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதாகவும் ஹர்பால் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *