போலீஸ் வாகனம் மீது மோதி இளைஞர் படுகாயம்!

- Shan Siva
- 20 Dec, 2024
ஜெலி, டிச 20: நேற்றிரவு ஜாலான் ஜெலி-தாபோங்கின் 10-வது கிலோமீட்டரில் போலீஸ் ரோந்து கார் மீது தனது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓர் இளைஞர் பலத்த காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு இரவு 9.20 மணிக்கு தகவல் கிடைத்ததாக மாவட்ட போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் சாரி யாக்கோப் உறுதிப்படுத்தினார்.
ரோந்து கார் கோல பாலாவில் இருந்து ஜெலிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக அவர் கூறினார்.
நாய் ஒன்று சாலையைக் கடப்பதைத் தவிர்ப்பதற்காக ரோந்து கார் திரும்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், காரை நெருக்கமாகப் பின்தொடர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சரியான நேரத்தில் நிறுத்தத் தவறியதால், வாகனத்தின் வலது பக்கத்தில் மோதியதாக அவர் மேலும் கூறினார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் உடனடியாக சிகிச்சைக்காக ஜெலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சாரி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *