தென் கொரியா விமான விபத்து - அன்வார் இரங்கல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 29: தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் நடந்த பயங்கர விமான விபத்துக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடினமான நேரத்தில் தென் கொரியா மற்றும் தாய்லாந்து மக்களுக்கு மலேசியாவின் ஆதரவையும் அவர் வழங்கினார்.

தென் கொரியா மற்றும் தாய்லாந்து மக்களுடன் மலேசியா ஒற்றுமையுடன் நிற்கும் என்று குறிப்பிட்ட அவர், நம்மில் பலர் அன்பானவர்களுடன் புதிய ஆண்டைப் பற்றி சிந்திக்கும் நேரத்தில், வாழ்க்கை எத்தனை பலவீனமானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்றும், நம்மைச் சுற்றியுள்ளவர்களை மதிக்க சிறிது நேரம் ஒதுக்குவோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *