கோல லங்காட் நகராண்மைக் கழக அங்காடிக் கடைகளுக்கு மனு செய்வீர்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், டிச.14-

சிறு தொழில் வியாபாரம் செய்பவர்கள். கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் அங்காடிக் கடைகளுக்கு விரைந்து மனு செய்யும்படி நகராண்மைக் கழக உறுப்பினர் உமா நந்தினி தெரிவித்தார். வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த இந்திய பெண் மணிகள் அங்காடிக் கடைகளில் காலைச் சிற்றுண்டி, பலகார பட்சணங்கள் எளிதாக வெளியே எடுத்துச் செல்லக் கூடிய உணவு வகைகளை விற்று தங்களது வருமானத்தைப் பெருக்கி குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள நகராண்மைக் கழகம் அவங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளதாக அவர் கூறினார்.

மாவட்ட ரீதியில் அடையாளம் காணப் பட்டுள்ள இடங்களில் அமைக்கப் பட்டு ள்ள அங்காடிக் கடைகளுக்கு அதன் இடத்தைப் பொறுத்து 75 ரிங் கிட் முதல் 150 ரிங் கிட் வரை மாதாந்திரக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் சிறு தொழில் வியாபாரம் செய்வோர் வரும் 23.12.2024 க்குள் அலுவலக நேரத்தில் நேரில் வந்து உரிய மனு பாரங்களைப் பெற்று விண்ணப்பங்களை கால தாமதம் இன்றி சமர்ப்பிக்கும் படி உமா நந்தினி கேட்டுக் கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *