கோவிட் தடுப்பூசி விவகாரம்... பொய்ச் செய்தி பரப்பியவர் மீது 20 லட்சம் இழப்பீடு கேட்டு கைரி வழக்கு!

- Shan Siva
- 05 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 5: சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன், தனது தடுப்பூசி நிலைப்பாடு குறித்து அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு மத போதகரிடமிருந்து 20 லட்சம் வெள்ளி இழப்பீடு கேட்டுள்ளார்.
கோவிட் காலக்கட்டத்தில் மலேசியாவின் கோவிட்-19 தடுப்பூசி
திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியில் இருந்த கைரியை கேலி செய்வதற்காக ரசிக் அல்வி
சமூக ஊடகங்களில் இந்த அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாக வழக்கறிஞர் அப்துல் ரஷீத்
இஸ்மாயில் இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மத போதகர் தனது
அறிக்கைகளில் கைரியைப் பற்றி நேரடியாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தனது சமூக
ஊடகங்களில் கைரியின் பெயரைப் பயன்படுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், தனது தடுப்பூசி நிலைப்பாடு குறித்து "பொய்"
கூறியதாக கைரி 2022 இல் வழக்குத்
தொடர்ந்தார்.
கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின்
முயற்சிகளை ரசிக்கின் கருத்துக்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *