கண் திருஷ்டி இருக்கிறதா? எளிய பரிகார முறைகள்!

top-news
FREE WEBSITE AD

கண்திருஷ்டி முதல் தீய சக்தி வரை குடும்பத்தை நெருங்காமல் இருக்க சில பரிகாரங்களை ஆன்மீக செய்தி வழி பார்க்கலாம்.கண் திருஷ்டிப் பட்டவர்களின் உடலில் எப்போதும் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி ஏற்படும். புது உடை அணிந்தால் அது கிழியலாம் அல்லது கருப்புக் கறைகள் படலாம். தொடர்ந்து பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, இழப்பு என ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். உறவினர்களிடையே பகை, கணவன் - மனைவி இடையே சண்டை, சுப நிகழ்ச்சிகள் செய்வதில் தடை, கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள், தூக்கமின்மை ஆகியவையும் கண் திருஷ்டியின் அறிகுறிகளே.

கண் திருஷ்டியை போக்குவதற்கு சில எளிய பரிகாரங்களை வீட்டிலிருந்து செய்யலாம். வயதில் மூத்த ஒருவரைக் கொண்டு திருஷ்டி பரிகாரம் செய்ய வேண்டும். செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை பொழுதுகளில் தனியாக அல்லது கூட்டமாக கிழக்கு திசை நோக்கி நின்று கொள்ள வேண்டும். நிற்கின்ற அனைவருக்கும் ஒரே நபரே திருஷ்டியை கழிக்க வேண்டும்.

கண் திருஷ்டியை விரட்டுவதற்கு கற்பூரம் எரிப்பது காலம் காலமாக பின்பற்றி வரும் வழக்கமாகும். உடல் முழுவதும் கற்பூரத்தால் சுற்றி எடுத்து, அதை வாசலுக்கு வெளியில் வைத்து எரித்து விட வேண்டும். இதை நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக செய்ய வேண்டும். உப்பு, மிளகாய் வைத்து எரிப்பது, எலுமிச்சம்பழம், தேங்காய், பூசணிக்காய் ஆகியவற்றைக் கொண்டும் சுற்றிப் போடலாம்.

நெற்றியில் மஞ்சள் நிற பொட்டு வைத்துக் கொள்ளலாம். இது தீய கண் பார்வைகளை திசை திருப்புவதோடு நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். அதேபோல் நெற்றியில் கருப்பு மை போட்டு வைப்பது கண் திருஷ்டியை தடுக்கும். காதுக்குப் பின்பகுதிகளிலும் கருப்பு மை பொட்டு வைத்துக் கொள்ளலாம். மேலும் ருத்ராட்சம் அணிந்து கொள்வது தெய்வீக சக்தியை நமக்கு தருகிறது. தீய சக்திகள் நம்மை நெருங்காமல் இருப்பதற்கு ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம்.

வாசலில் மிகப்பெரிய பாத்திரம் வைத்து அதில் பூக்களை மிதக்க வைக்கலாம். திருஷ்டியை உள்வாங்கிக் கொள்ளும் திறன் பூக்களுக்கு உள்ளது. வீட்டு வாசலில் ரோஜா போன்ற செடிகளை வளர்க்கலாம் அல்லது வீட்டு வாசலில் வீட்டிற்கு வருபவர்களின் ஒட்டுமொத்த பார்வையை திசை திருப்பும் வகையில் அகோரமான பொம்மை, பூசணிக்காயை தொங்கவிடலாம். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடலாம். வாழைக்கு கண் திருஷ்டியை களையும் குணமுண்டு. வீட்டிற்கு வருபவர்களின் பார்வையை திசை திருப்புவதற்கு வீட்டில் மீன் தொட்டியை வளர்க்கலாம்.

வீட்டிற்குள் கெட்ட சக்தியில் நுழையாமல் தடுக்க எலுமிச்சம்பழம் உதவி புரிகிறது. கண் திருஷ்டி விலக விரும்புபவர்கள் வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் கற்றாழையை தொங்கவிடலாம் அல்லது எலுமிச்சை, பச்சை மிளகாய் கோர்த்து அதை நிலைப்படியில் கட்டி தொங்க விடலாம். கடைகளில் கிடைக்கும் படிகார கல்லை வாங்கி அதில் கருப்பு கயிறை சுற்றி அதை வீட்டு வாசலில் நிலைப்படியில் கட்டி தொங்கவிடலாம்.

கண் திருஷ்டியை போக்கும் வல்லமை ஆகாய கருடன் கிழங்கிற்கு உண்டு. நாட்டு மருந்து கடைகளில் இதை வாங்கி வேர்களை நீக்காமல் கழுவி அதில் மஞ்சள், குங்குமம் வைத்து வீட்டு வாசலில் கட்டி விட வேண்டும். மறந்தும் இதை வீட்டிற்கு உள்ளே கட்டி விடாதீர்கள். கோயில்களில் கிடைக்கும் அபிஷேக தீர்த்தங்கள் மற்றும் கங்கை, காவிரி முதலான புனித நதிகளின் தீர்த்தங்களை வீடுகளில் தெளித்து விடலாம். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டும் தன்மை கொண்டது.


ஒருவர் தீய எண்ணத்துடன் நம்மை பார்க்கும் பொழுது நமக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், துரதிஷ்டம் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது. உங்களுக்கு கண் திருஷ்டி இருப்பதாக நினைத்தால் மேற்கூறிய பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் பொதுவான மற்றும் ஆன்மீக தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை மட்டுமே.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *