பாலிசிதாரர்களுக்கு வெ. 212 கோடியை சொக்சோ வழங்கியது-ஸ்டீவன் சிம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 12-

சொக்சோ எனப்படும் சமூகக் காப்புறுதிக் கழகம் கடந்தாண்டில் 210 கோடி வெள்ளியை சுமார் 219,640 பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது. நிரந்தரமாகவும் இடைக்காலமாகவும் உடல்  செயலிழப்புக்கு ஆளானவர்களுக்கு அந்த இழப்பீடு வழங்கப்பட்டது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மக்களவையில் தெரிவித்தார்.

மொத்த இழப்பீட்டுத் தொகையில் 210 கோடி வெள்ளி 215, 113 பாலிஸிதாரர்களுக்கு வழங்கப்பட்டது.தொழிலிட விபத்துகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு அப்பணம் வழங்கப்பட்டது.

மேலும் சுயவேலைவாய்ப்பு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மேலும் 4,476 பாலிஸிதாரர்களுக்கு இரண்டு கோடியே அறுபத்தைந்து லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது. அது தவிர, இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 51பேருக்கு 75,947 வெள்ளி வழங்கப்பட்டது என்று சிம் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *