முன்னாள் மாமன்னர் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டாம்! - சபாநாயகர்!

- Sangeetha K Loganathan
- 05 Feb, 2025
பிப்ரவரி 5,
முன்னாளர் மாமன்னர் Sultan Abdullah Sultan Ahmad Shah குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்மறையானக் கருத்துகளை வெளியிட வேண்டாம் என சபாநாயகர் Tan Sri Johari Abdul வலியுறுத்தினார். எதிர்கட்சி தலைவர் Hamzah Zainudin மலாய் ஆட்சியாளர்கள் குறித்தும் மன்னிப்பு வாரியம் குறித்தானக் கருத்துகளை முன்வைக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையின் சட்டத்தை மீறி மலாய் ஆட்சியாளர் குறித்து கருத்துகள் பகிரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மக்கள் நலன் குறித்தானக் கருத்துகளைப் பகிர மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதாகச் சபாநாயகர் தெரிவித்தார்.
மாமன்னர் குறித்தும் மலாய் ஆட்சியாளர்கள் குறித்துமான விவாதத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் இது குறித்தான விவாதங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர வேண்டாம் என்றும் முன் அனுமதியைப் பெற்ற பின்னர் இது குறித்து விவாதிக்கலாம் என்றும் சபாநாயகர் Tan Sri Johari Abdul வலியுறுத்தினார்.
Yang Dipertua Dewan Rakyat Johari Abdul menegaskan agar ahli parlimen tidak mengeluarkan kenyataan negatif mengenai bekas Yang di-Pertuan Agong Sultan Abdullah. Perbincangan mengenai institusi diraja memerlukan kelulusan terlebih dahulu sebelum boleh dibahas dalam Parlimen.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *