லாரியை மோதிய கார்! தம்பதியர் இருவர் பலி!

top-news

ஜனவரி 25,


இன்று அதிகாலை Gua Musang சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் வந்த 10 டன் லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தம்பதியர் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

அதிகாலை 4.06 மணிக்கு குவா முசாங்கிலிருந்து கோலா க்ராய் செல்லும் சாலையில் விபத்து நிகழ்ந்திருப்பதாக அவசர அழைப்பைப் பெற்ற நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கிளாந்தான் மாநில மீட்பு ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வாகனத்தில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மற்றொரு வாகன ஓட்டுநரும் லாரி ஓட்டுநரும் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pasangan suami isteri maut dalam kemalangan di Jalan Gua Musang-Kuala Krai apabila kereta mereka hilang kawalan dan melanggar lori 10 tan. Pemandu lori dan seorang lagi mangsa mengalami kecederaan ringan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *