19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆல் இங்கிலாந்து அரையிறுதிக்கு மலேசிய பெண்கள் இரட்டையர் முன்னேற்றம்
- Surendran Sumdraraj
- 07 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 7-
மலேசியாவின் பெண்கள் இரட்டையர் ஜோடி பேர்லி டான் – எம். தினா 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறி புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
பர்மிங்காமில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அவர்கள் இந்தோனேசிய ஜோடி பெப்ரியானா த்விபுஜி குசுமா – மேய்லிசா திரியாஸ் புஸ்பிதாசாரியை 21-9, 21-18 என்ற கணக்கில் 43 நிமிடங்களில் தோற்கடித்தனர். உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள மலேசிய ஜோடி இந்த போட்டியில் முழுமையான ஆதிக்கத்துடன் விளையாடி நம்பிக்கையூட்டும் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2007ஆம் ஆண்டு ஆல் இங்கிலாந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய வோங் பேய் ட்டி – சின் ஈ ஹுய் ஜோடியின் சாதனையை பேர்லி–தினா இணை மீண்டும் சமமாக்கியுள்ளது.
மலேசிய ஜோடி முதல் செட்டிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்பத்திலிருந்தே போட்டியை முழுமையாக கட்டுப்படுத்தி, பெரும் முன்னிலை பெற்ற அவர்கள் அந்த செட்டை 21-9 என எளிதில் கைப்பற்றினர்.
இரண்டாவது செட்டிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து காட்டிய பேர்லி–தினா இணை இறுதியில் 21-18 என வெற்றி பெற்று அரையிறுதிக்கான இடத்தை உறுதிப்படுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



