நெடுஞ்சாலைகளில் நாளை முதல் வேக வரம்பு குறைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜான் 27: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலைகளில் வேக வரம்பு நாளை செவ்வாய்க்கிழமை ஜனவரி 28 முதல் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2 ஆம் தேதிவரை மணிக்கு 90 கிமீ வேகத்தில் இருந்து 80 கிமீ வேகமாகக் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சாலை விபத்துகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் முக்கியமானதாக கருதப்படாத சாலை பழுது மற்றும் பராமரிப்பு பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும். அதே நேரத்தில் சாலை பயனர்களின் பாதுகாப்பிற்கான அவசரகால பணிகள் முறையாக திட்டமிடப்படும் என்று அவர் கூறினார்.

தேவைப்பட்டால், சாலை பயனர்களின் பயணத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்று வழிகள் வழங்கப்படும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அனைத்து சாலை பயனர்களும் தங்கள் பயணங்களுக்கு முழுமையாகத் தயாராக இருக்கவும், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்யவும், வாகனம் ஓட்டும்போது சோர்வு மற்றும் தூக்கத்தைத் தவிர்க்க போதுமான ஓய்வு எடுக்கவும் நந்தா அறிவுறுத்தினார்.

சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, சாலை பயனர்கள் தங்கள் டெபிட் கார்டுகள், டச் அன்’ கோ கார்டுகள் மற்றும் இ-வாலட்டுகளில் (RFID பயனர்களுக்கு) போதுமான நிதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

நீண்ட தூர பயணங்களுக்கு தங்கள் டயர்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்து, வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *