RM 30,000 லஞ்சம் பெற்றதற்காக காவல் ஆணையர் கைது! – SPRM

top-news

பிப்ரவரி 11,

பெர்லிஸில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 49 வயது காவல் ஆணையர் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணியளவில் பெர்லீஸ் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாகப் பெர்லீஸ் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய இயக்குநர் Mohd Nor Adha Ab Gani தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையில் சுமார் RM30,000 வரையில் அவர் லஞ்சம் பெற்றிருப்பதாகவும் சக காவல் துறை அதிகாரிகளிடமிருந்தே லஞ்சம் பெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட காவல் ஆணைரை மேலதிக விசாரணைக்காக 6 நாள்கள் விசாரணை காவலில் வைக்கும்படி Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Seorang pegawai polis berusia 49 tahun di Perlis ditahan SPRM kerana disyaki menerima rasuah RM30,000 antara 2023 dan 2024. Suspek didakwa menerima wang daripada rakan setugas dan kini direman selama enam hari untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *