அடிமையாக இருந்த 50 வெளிநாட்டினர்கள் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 16 Dec, 2024
டிசம்பர் 16,
தையல் தொழில்சாலையில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களை அடிமை போல வேலைக்கு அமர்த்திய 46 வயது Bangladesh ஆடவரைத் தேசிய குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர்.
கோலாலம்பூரில் உள்ள Cheras பகுதியில் இயங்கி வந்த தையல் தொழில்சாலையில் அதிகமான வெளிநாட்டினர்கள் வேலை செய்வதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தியதில் 34 Bangladesh ஆடவர்களும் 15 மியன்மார் பெண்களும் முறையான ஆவணங்களின்றி பணிக்கு அமர்த்தப்பட்டது தெரிய வந்துள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் DATO’ ZAKARIA BIN SHAABAN தெரிவித்தார்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் பணிக்கு அமர்த்தியது அவர்களைக் காயப்பட வேலை வாங்குவது, ஆள் கடத்தல், பணமோசடி எனும் குற்றங்களுக்காகத் தையல் தொழில்சாலையின் மேலாளர் என நம்பப்படும் 46 வயதான Bangladesh ஆடவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் DATO’ ZAKARIA BIN SHAABAN தெரிவித்தார்.
Imigresen menahan 50 pekerja asing tanpa dokumen di kilang jahit Cheras, termasuk 34 lelaki Bangladesh dan 15 wanita Myanmar. Pengurus kilang, warga Bangladesh, ditahan atas dakwaan eksploitasi buruh dan jenayah pemerdagangan manusia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *