வணிகத்தளத்தில் 80 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

ஜனவரி 2,


வணிகத்தளத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட 80 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Khairrul Aminus Kamaruddin தெரிவித்தார். நேற்று மாலை 6 மணியளவில் Seri Kembangan பகுதியில் உள்ள வணிகத்தளத்தில் 180 வெளிநாட்டினர்களைச் சோதனையிட்டதாகவும் 80 வெளிநாட்டினர்கள் முறையான ஆவணங்கள் இல்லாததால் தடுத்து வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 80 வெளிநாட்டினர்களும் 20 முதல் 50 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் Bangladesh, Myanmar, Filipina, Thailand, Yaman, India, Indonesia, Nigeria ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளதாகவும் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Khairrul Aminus Kamaruddin தெரிவித்தார்.

Seramai 80 pekerja asing tanpa dokumen sah ditahan dalam serbuan ke atas sebuah premis perniagaan di Seri Kembangan. Mereka berasal dari Bangladesh, Myanmar, Filipina, dan negara lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *