Cap Max போலி முதலீட்டில் RM 544,200 இழந்த ஆடவர்!

top-news

டிசம்பர் 18,

போலியான முதலீட்டில் தனது வாழ்நாள் சேமிப்புப் பணைத்தை முதலீடு செய்த 45 வயது ஆடவர் RM 544,200 பணத்தை இழந்துள்ளதாக KULAI மாவட்டக் காவல் ஆணையர் TAN SENG LEE தெரிவித்தார். 

முதலீடு செய்த தொகையை விடவும் 2 மடங்கு லாபம் பெறலாம் என நம்பி முகநூல் மூலமாக Cap Max எனும் செயலியில் தனது பணத்தைச் செலுத்துவதாக எண்ணி 4 வெவ்வேறு வங்கிக் கணக்கிற்குப் பணத்தைச் செலுத்தியுள்ளார். 

பணத்தைச் செலுத்திய சில நாள்களிலேயே RM 9.4 மில்லியன் லாபம் பெற்றதாகச் செயலியில் குறிப்பிட்ட நிலையில் மறுநாள் செயலி பயன்பாட்டில் இல்லை எனும் குறுஞ்செய்தியை மட்டும் தாம் பெற்றதாக 45 வயது ஆடவர் KULAI மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Seorang lelaki berusia 45 tahun kerugian RM544,200 selepas ditipu dalam pelaburan palsu melalui aplikasi "Cap Max." Mangsa terperdaya dengan janji keuntungan tinggi, tetapi aplikasi hilang selepas transaksi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *