ஆற்றில் மூழ்கிய மாணவர்! சடலமாக மீட்பு!

top-news

டிசம்பர் 5,

நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 16 வயது Felda Neram இடைநிலைப்பள்ளி மாணவரான Yusuf Adnan திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியதாகவும் தொடர் தேடுதல் பணியின் பலனாக மாணவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது என மீட்பு பணி ஆணையர் Mohd Zailani Abdullah தெரிவித்தார். 

நேற்று மாலை 4 மணியளவில் 10 நண்பர்கள் கூட்டாக Kemaman பகுதியில் உள்ள Neram ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென காற்றாற்று வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவரைக் காப்பாற்ற முயற்சித்தும் அவரின் நண்பர்களால் காப்பாற்ற முடியாத நிலையில் மீட்பு ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை தொடங்கி தேடுதல் பணியை நள்ளிரவு 2 மணிவரையில் தொடர்ந்ததாகவும் மீண்டும் காலை 7 மணிக்கு மீட்புப் பணி தொடங்கிய நிலையில் காலை 8.10 க்கு மாணவரின் உடல் 400 மீட்டர் தொலைவில் உள்ள மர வேர்களில் சிக்கியிருந்ததாகவும் Zailani Abdullah தெரிவித்தார்.

Pelajar SMK Felda Neram, Mohd Yusuf Adnan, 16, ditemukan lemas setelah hilang dihanyutkan arus di Sungai Neram. Mayatnya dijumpai pasukan STORM 400 meter dari lokasi kejadian dan diserahkan kepada polis untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *