அபாயகரமாக லாரியை ஓட்டிய ஆடவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்!

- Sangeetha K Loganathan
- 04 Jan, 2025
ஜனவரி 4,
சிரம்பானிலிருந்து போர்டிக்சனுக்குச் செல்லும் சாலையில் கட்டுப்பாடின்றி லாரி ஒன்று பிற வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்படி பயணித்த லாரி ஓட்டுநர் நேற்று மாலை 4.20 மணிக்குச் சிரம்பான் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகச் சிரம்பான் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
நேற்று நண்பகல் 12.20 மணிக்கு இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியது. Mambau இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் அவர் அபாயகரமாக லாரியைச் செலுத்தியதாகக் காவல் துறை 65 வயதான லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
Seorang pemandu lori berusia 65 tahun menyerah diri di balai polis Seremban selepas video menunjukkan dia memandu secara berbahaya di jalan Mambau tular di media sosial. Polis telah membuka kes terhadapnya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *