மதுபோதையில் வாகனம் ஓட்டும் குற்றங்களுக்கு கடுமையான சட்டம் அவசியம் – டத்தோ டாக்டர் முகமது அக்மல் சாலே வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 30 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 30-
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு விபத்துகளைத் தடுப்பதற்காக, குற்றவாளிகளுக்கு எதிராக அரசு மேலும் கடுமையான மற்றும் தைரியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமனோ இளைஞர் பரிவு தலைவர் டத்தோ டாக்டர் முகமது அக்மல் சாலே வலியுறுத்தியுள்ளார்.
தற்போது அமலில் உள்ள சாலை போக்குவரத்து சட்டம் 1987 (திருத்தம் 2020) பிரிவு 44(1) கீழ் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 50,000 வெள்ளி முதல் 100,000 வெள்ளி வரை அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் உடனடியாக இடைநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டாலும், அவை இந்தக் குற்றத்தை தடுக்கப் போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார்.
இதனை முன்னிட்டு, மனித உயிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மூன்று முக்கிய பரிந்துரைகளை அவர் முன்வைத்துள்ளார். குறிப்பாக, மதுபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தும் வழக்குகளில் குற்றவாளிகளை குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆயுள் தண்டனை அல்லது அதற்கு இணையான கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கட்டாய நஷ்டஈடு வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



