காவல் நிலையத்தைத் தாக்கிய இளைஞர் கைது!

- Sangeetha K Loganathan
- 10 Jan, 2025
ஜனவரி 10,
மலாக்காவில் உள்ள TANJONG KLING காவல் நிலையத்தில் சுத்தியலால் தாக்கிய 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலாக்கா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Md Nazri Zawawi தெரிவித்தார். அதிகாலை 12 மணியளவில் TANJONG KLING காவல் நிலையத்திற்கு வந்த இளைஞர் சுத்தியலால் கண்ணாடிகளையும் பூச்சாடிகளையும் உடைத்த நிலையில் பாதுகாப்பிற்காக இருந்த காவல் அதிகாரிகள் தாக்குதல் நடத்திய இளைஞரைச் சுற்றி வலைத்து பிடித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ல 25 வயது இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் TANJONG KLING காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என மலாக்கா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Md Nazri Zawawi விளக்கமளித்தார்.
Seorang lelaki, 25, ditahan selepas merosakkan Balai Polis Tanjong Kling Melaka menggunakan tukul. Polis mengesahkan suspek mengalami masalah mental dan akan menjalani pemeriksaan perubatan. Tiada kecederaan dilaporkan terhadap anggota bertugas semasa kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *