ஜாமின் தொகை செலுத்தாத GISBH ஊழியர் கைது!

top-news

ஜனவரி 7,

GISB Holdings Sdn Bhd (GISBH) பராமரிப்பு இல்லத்தில் குழந்தைகளை உடல் ரீதியகாத் துன்புறுத்தியதாகவும் 6 வயதுள்ள 4 குழந்தைகளுக்குத் தீக்காயம் ஏற்படும் அளவிற்குத் தாக்கிய 20 வயது Puteri Nurin Amalina Ahmad Daud எனும் ஊழியர் ஜாமின் தொகையைச் செலுத்த தவறியதால் இன்று காலை மீண்டும் கைது செய்யப்பட்டார்.

RM 80,000 ஜாமின் தொகையைச் செலுத்த தவறியதற்காக Sesyen நீதிமன்றம் 20 வயது Puteri Nurin Amalina எனும் ஊழியரை அடுத்த நீதிமன்ற விசாரணை வரையில் சிறையில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் Taman Merbok Ria பகுதியில் உள்ள GISBH பராமரிப்பு இல்லத்தில் நான்கு குழந்தைகளைக் கொடூரமாகத் துன்புறுத்தியது மட்டுமின்றி தீக்காயங்களுக்கும் இலக்காக்கியதாக 20 வயது Puteri Nurin Amalina மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *