மலேசிய எல்லைக்குள் நுழைந்த 5 மியான்மார் நாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 11 Feb, 2025
பிப்ரவரி 11,
சட்டாவிரோதமாக மலேசியக் கடல் எல்லைக்குள் ஊடுறுவிய படகைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையமான Maritim அதிகாரிகள் சோதனையிட்டதில் 5 மியன்மார் ஆடவர்கள் பிடிப்பட்டனர். சிலாங்கூர் Pulau Tengah கடல் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 முதல் 42 வயதுள்ள மியன்மார் நாட்டினர்கள் தவறுதலாக மலேசிய எல்லைக்குள் நுழைந்ததாகத் தெரிவித்த நிலையில் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கடல்சார் பாதுகாப்பு ஆணையமான Maritim தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய வகையில் படகில் மலேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டதாகவும் அவர்களிடம் மீன் பிடிப்பதற்கான ஆதாரங்களும் இல்லை என தெரிய வந்துளதாகச் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணைய இயக்குநர் கேப்டன் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார்.
Lima warga Myanmar ditahan kerana menceroboh perairan Malaysia secara haram di Pulau Tengah, Selangor. Mereka berusia antara 18 hingga 42 tahun dan tidak mempunyai dokumen pengenalan diri yang sah. Bot mereka mengibarkan bendera Malaysia secara mencurigakan. Siasatan lanjut sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *