179 வெளிநாட்டுக் கைதிகளைத் தாயகம் அனுப்பிய குடிநுழைவுத் துறை!

- Sangeetha K Loganathan
- 26 Jan, 2025
ஜனவரி 26,
கடந்த ஆண்டு மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததால் கைது செய்யப்பட்ட 179 வெளிநாட்டினர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்குக் குடிநுழைவுத் துறை அனுப்பி வைத்துள்ளது. மியன்மாரைச் சேர்ந்த 107 பேர், பங்கலாதஷைச் சேர்ந்த 45 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர், நேப்பாளத்தைச் சேர்ந்த 8 பேர், இந்தியாவைச் சேர்ந்த 5 பேர், வியாட்னாமைச் சேர்ந்த இருவரும், சூடானைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 179 பேரை அனுப்பி வைத்துள்ளதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
கடப்பிதழ் காலாவதியானப் பின்னரும் தொடர்ந்து மலேசியாவுக்குள் தங்கியிருந்து வேலை செய்து வந்ததால் கைது செய்யப்பட்ட இவர்களை முழுமையாக விசாரித்து, அபராதத்துடனும் குறைந்தபட்சச் சிறை தண்டனைக்குப் பின்னர் தற்போது அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் இவர்கள் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Kementerian Imigresen Malaysia menghantar pulang 179 pendatang asing tanpa izin dari Myanmar, Bangladesh, Indonesia, Nepal, India, Vietnam dan Sudan. Mereka didapati tinggal secara haram, dikenakan denda, dipenjara minimum dan diharamkan masuk semula ke Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *