குழந்தைகளுடன் தங்கியிருந்த வெளிநாட்டினர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 22 Jan, 2025
ஜனவரி 22,
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து தங்கியிருந்த 4 குழந்தைகள் உட்பட 10 பேர் நேற்று எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். 4 குழந்தைகளும் 2 ஆண்களும் 4 பெண்களும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுள்ளதாகவும் அவர்களை மலேசியாவுக்குள் பாதுகாப்பாகத் தங்க வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 3 வயது உள்ளூர் ஆடவரையும் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாந்தானில் உள்ள Pasir Mas கிராமப் பகுதியில் சந்தேகத்திற்குரியவர்கள் தங்கியிருப்பதாகப் புகார் பெற்றதன் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகப் பாதுகாப்புச் சிறப்புப் படை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டினர்களும் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Sepuluh pendatang tanpa izin, termasuk empat kanak-kanak ditahan PGA di Pasir Mas, Kelantan. Seorang lelaki tempatan berusia 33 tahun juga ditahan kerana dipercayai melindungi mereka. Semua pendatang berasal dari Myanmar, menurut siasatan awal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *