கடற்கரையில் மனித எலும்புகள்!

- Sangeetha K Loganathan
- 31 Jan, 2025
ஜனவரி 31,
நேற்றிரவு கோலா திரங்கானு Batu Buruk 2 கடற்கரையில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார். இரவு 10 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்புக் கிடைக்க பெற்றதாகவும் கடற்கரையிலிருந்து 40 மீட்டர் தொலைவில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முதற்கட்ட ஆய்வில், 34 மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், சம்மந்தப்பட்ட எலும்புகள் மனித உடல் எலும்புகள் என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கும் நிலையில் தடயவியல் அதிகாரிகள் எலும்பகளை மேலதிக ஆய்வுக்குற்படுத்தபடவிருப்பதாகவும் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.
Tulang manusia telah ditemui di Pantai Batu Buruk 2, Kuala Terengganu. Polis menerima panggilan kecemasan dan menemui 34 tulang pada jarak 40 meter dari pantai. Tulang tersebut akan dianalisis oleh pakar forensik untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *