போலி முதலீட்டில் RM214,700 இழந்த காய்கறி வணிகர்!

top-news

ஜனவரி 30,

சமூக வலைத்தளத்திம் மூலமாக அறிமுகமான முதலீட்டில் தனது வாழ்நாள் சேமிப்பான RM214,700 ரிங்கிட்டை முதலீடு செய்த 54 வயதானக் காய்கறி விற்பனை செய்யும் பெண் தாம் ஏமாற்றப்பட்டதாகக் கோலா திரங்கானு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முதலீடு செய்த 3 முதல் 6 மணிநேரத்திற்குள் அதிக லாபம் பெறுவதாக வெளிவந்த விளம்பரத்தை நம்பி தனது சேமிப்புப் பணம் உட்பட நகைகளையும் அடகு வைத்து 14 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 42 பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளதாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார். 

முதலீடு செய்த சில நாள்களில் லாபம் கிடைப்பதாகக் குறுஞ்செய்திகள் கிடைத்தாலும் வங்கியில் பணம் இல்லை என்றதும் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காய்கறி வியாபாரியான 54 வயது பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

Seorang peniaga sayur berusia 54 tahun kehilangan RM214,700 selepas terpedaya dengan skim pelaburan palsu di media sosial. Mangsa membuat 42 transaksi ke 14 akaun bank sebelum menyedari dirinya ditipu dan membuat laporan polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *